பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 குழலாய்ச் சிறுத்திருக்கும். இவ்விடத்தில் நாடிகளைத் துல்லியமாக அறியலாம். மற்ற இடங்களில் ரத்தக் குழாய் பருத்திருக்கும். எளிதில் அறிய இயலாது.

மணிக்கட்டுக்கு மேலாக ஓர் அங்குல வீதம் மூன்று விரல்களால் சமமாக மெதுவாக அழுத்தி நாடியைப் பரீட்சிக்கலாம். விரல்களே மாறி மாறி அழுத்தியும் தளர்த்தியும் பார்க்குங்கால் காடி ஒட்டம் புலப்படும்.

ஆண்களுக்கு வலக் கையிலும், பெண்களுக்கு இடக் கையிலுமாக நாடி பார்த்தல் நலம்.

மூன்று விரல்களால் நாடி பார்க்கும்போது முதல் சுட்டு விரலால் வாத காடியையும், நடு விரலால் பித்த நாடியையும், கடை விரலால் சிலேட்டும காடியையும் அறியலாம். வாத நாடி கோழி போலவும், பித்த நாடி ஆமை போலவும், சிலேட்டும நாடி பாம்பு போலவும் நடக்கும்.

பெண்களுக்கு வாதம் பாம்பு போலவும், பித்தம் தவளை போலவும், சிலேட்டுமம் அன்னம் போலவும் நடக்கும்.

கைவிரல் ஐந்தினும் பஞ்சபூதநாடிகள் இருக்கும். பெருவிரலில் பூதநாடியும், சுட்டுவிரலில் வாதநாடியும், நடுவிரலில் பித்தநாடியும், மோதிரவிரலில் சிலேட்டும் நாடியும், சிறுவிரலில் பூதநாடி, குருநாடி ஐந்தும் சேர்ந்து நிற்கும்.

குருநாடி எப்பொழுதும் பித்தத்தின் முன்னே நிற்கும். குருநாடி வாதத்தில் அட்டைபோல் புரண்டு வருமாயின்