பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன் படையை ஊக்கிப் பேசினான்-அவன்தன்
சாகசத்தைக் கண்டவரும் வீரிட்டெ ழுந்தார்
வந்தபகை வெள்ளத்தை யெல்லாம்-எலிகளை
மாய்க்கும் பாம்பு போலவீழ்த்தித் தோள்கொட்டினார்

கரிகாலன் தாக்கு மிடத்தில்-பகைவர்கள் காற்று முன்னே பஞ்செனவே பறந்தொழிந்தார்
ஒருசிறு பையனென்று நாம்-எண்ணியிங்கு
ஒன்றுகூடி வந்தபிழை என்று மொழிந்தார்

வேளிர்களும் மருண்டு விட்டார்-பாண்டியனும்
வேற்று நாட்டிற் காசை தவ றென்று குலைந்தான்
தேளின் கொட்டுப் பட்டதிருடன்-வாயிழந்து
திரும்பியே ஓடும்நிலை தன்னை யடைந்தார்

சேரமன்னன் புறம் நாணியே-உணவொன்றும்
தீண்டாமல் நல்லுயிரைப் போக்கி மறைந்தான்
போரெனில் வெண்ணிப் போரெனக்-கவிஞர்கள்
போற்றக் கரி காலன் தனிச் சிறப்பெய்தினான்.

58