பக்கம்:பச்சைக்கனவு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 0 லா. ச. ராமாமிருதம்

முதன் முதலில் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பவள் அவள்தான். என் வயிற்றுப் பிண்டமே இப்படியிருந்தால், வீட்டுக்கு வந்தவா நீங்கள் என்ன என் பேச்சைக் கேட்டுடப் பொறேள்?”

'இல்லேம்மா, நாங்கள் நீங்கள் சொன்னத்தைக் கேட்கறோம்மா...' என்று ஏகக் குரலில் பள்ளிப் பையன்கள், வாய்பாடு ஒப்பிப்பது போல், கோஷ்டி யாய்ச் சொல்லுவோம்.

"ஆமா என்னமோ சொல்றேள்; காரியத்தில் காணோம். என்னைச் சுற்றி அஞ்சுபேர் இருக்கேள். முதுகைப் பிளக்கிறது; ஆளுக்கு அஞ்சு நாள்-ஏன், நானும் செய்யறேன். என் பெண் செய்யமாட்டாள்; அவள் வீதத்தை நான்தான் செஞ்சாகணும். ஆளுக்கு அஞ்சு நான் காலையிலெழுந்து காப்பி போடுங்களேன் என் கிறேன். கேட்டதுக்குப் பலன் எல்லோரும் இன்னும் அரைமணி நேரம் அதிகம் துரங்கறேள்.'

எங்களுக்கு ரோஸ்மாயிருக்கும். இருந்து என்ன பண்ணுகிறது? அம்மாவை எதிர்த்து ஒண்னும் சொல்ல. முடியாது. நாங்கள் 5 மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்துகொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு. இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ண முடியும்? -

'வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சுட்டு போயிடுங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே! நான் ஒண்டியாயிருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும்; செஞ்சிண் டிருந்தேன். இப்பொ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு; வேலையை ஏலம் போட்டாறது. ஊம். ஊம்.....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/109&oldid=590767" இலிருந்து மீள்விக்கப்பட்டது