பக்கம்:பச்சைக்கனவு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 லா. ச. ராமாமிருதம்

கொண்டிருக்கின்றன. அல்லது கவிந்துகொண்டிருக் கின்றன. புதுப் பிறப்புள் புகுந்து புறப்பட்டுக் கொண் டிருக்கிறோம். நினைவுகள் அழகிய இதழ்கள்.”

அவள் மேடையினின்று இழிந்து அவன் கால்களை மார்புடன் அணைத்துக் கொண்டாள். சுருதியோசை அவர்களைச் சூழ்ந்து கோட்டை கட்டிக்கொண்டது.

'நீங்கள் என் வாழ்க்கையில் வந்து முளைத்ததை நினைக்கட்டுமா? எனக்கு ஒரே சமயத்தில் நம் வாழ்க்கை யில் ஏதேதோ நினைவு வருகிறது.'

'நீ எது நினைத்தாலும் உன் இஷ்டமே என் இஷ்டம்.”

'ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை எத்தனையோ விதங்களில் என் வாழ்க்கையில் உங்கள் பிரவேசத்தை நினைத்துக்கொள்கிறேன். இன்னும் எனக்கு அலுப்பு ஏற்படவில்லை.'

'உனக்கும் எனக்குமிடையில் இந்நிலையில் அலுப்பு என்பது இல்லை.”

'அது மாத்திரம் அல்ல. நினைத்ததையே நினைத்துக் கொள்வதில், நினைத்ததைச் சொல்வதில் இன்பமாக இருக் கிறது. ஒரொரு சமயமும் ஒரொரு புது அர்த்தம் தோன்று கிறது. நிஜம்மா, இதைப்பத்தி உங்களிடம் சொல்றப்போ எனக்கு நாக்கு தொண்டைவரை தித்திக்கிறது.”

'உன் சொல்ருசியில் என் நாக்கிலும் எச்சில் ஊறுகிறது.'

"நான் காலேஜிலிருந்து அப்போதுதான் வீட்டுள் நுழைந்தேன், ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா கூப்பிட்டார். நான் உள்ளே வந்தேன். வந்ததும் உங்கள் முகத்தைக் காணவில்லை. முதுகைத்தான் கண்டேன். சுவரில் மாட்டி யிருந்த படத்தை சிந்தித்துக்கொண்டிருந்தீர்கள். முதுகின் பின்னால் கோத்த உங்கள் கைகளைக் கண்டேன். உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/81&oldid=590739" இலிருந்து மீள்விக்கப்பட்டது