பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


வரும்போது, ஒரு முடிவையும் நிர்ணயித்துக் கொண்டு தான் அவர் கம்பெனிக்கு வந்தார். எப்பாடு பட்டேனும் யாமினியின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்துவிடவேண்டும்; அதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றே அவர் கருதினார்,'யாமினியைச் சந்தத்து, அவளிடம் மன்னிப்புக் கேட்டால்தான் என் பாவத்துக்கு விடிவு ஏற்படும்...நான் செய்த அந்தப் பாவம்...ஐயோ...நினைக்கவே நெஞ்சு பதறுகிறதே!உயிர்க்கழுவில் துடிக்கிறதே உள்ளம் !...பக வானே !...' என்று மனம் புழுங்கினார்.