சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 353
வெளிப்பட்டுய்ந்த மறைச் சிறுவனே நம்பியாரூரர் அவிநாசித் திருக்கோயிலுக்கு அழைச்துச்சென்று அருளாளராகிய இறைவரைத் தொழுது போற்றி வேதியரது வீட்டிற்கு அழைத்துச் சென்று மங்கல வாத்தியம் முழங்க அப்புதல்வனுக்கு உபநயனஞ் செய் வித்தருளினர்.
திருப்புக்கொளியூரில் மடுவில் நீராடிய மறைச் சிறுவைெருவன் முதலேயால் விழுங்கப்பட்டு இறந்து போன துயரச் செய்தி அவ்வூர்க்குச் சென்ற நம்பியா ரூர ரது திருவுள்ளத்திலே அடங்காக் கவலேயை யுண்டு பண்ணிய தென்பது, அவர் அப்புதல்வனே உயிர்ப் பித்தல் வேண்டி அவிநாசி யிறைவரை நினேந்து போற்றிய திருப்பதிகத்துள்,
'வழிபோவார் தம்மொடும் வந்துடன் கூடிய மாணிநீ
ஒழிவதழிகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலேப் புக்கொளியூரவி நாசியே இழியாக் குளித்த மாணி யெனேக்கிறி செய்ததே’ 5了莎 வும்,
- புள்ளேறு சோலைப் புக்கொளியூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணி யெனேக்கிறி செய்ததே எனவும்,
கரைக்கான் முதலேயைப் பிள்ளே தரச்சொல்லு
காலனேயே’
எனவும் நெஞ்சம் நெக்குருகி இறைவனே வேண்டுத லாற் புலனும். இங்ங் னம் இனிமை பொருந்திய செந்தமிழ்ப் பதிகத்தைப்பாடி நம்பியாரூரர் முதலே யுண்ட பாலனே மீண்டும் உயிர்பெற்றுவரச் செய்தரு ளிய இவ்வற்புத நிகழ்ச்சியை,
- கொடுத்தான் முதலே கொள் பிள்ளேக்குயிரன்று
புக்கொரியூர்த் தொடுத்தான் மதுரகவியவி நாசியை’
என நம்பியாண் டார் நம்பி குறிப்பிட்டுப் போற்றி யுள்ளார்.