பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 573

என்ற பாடல் இப்பெயர்க் காரணங்களே விளக்குவ தாகும். கோடாக வரைந்த ஒவியத்தினேப் போன்றது தாளத்தோடு அமைந்த இயற்பாவினது ஒ ைச. கோடாக அமைந்த ஒவியத்தின்மேல் அதன் உருவிற் குத்தக்க செம்மை, பசுமை முதலிய நிறங்களேத் திட்டுவது போன்றது, பாவோடு இயைத்துரைக்கப் படும் இசையாகும். நிறம்’ என்ற தமிழ்ச் சொல்லோடு ஒத்த பொருளுடையது இராகம் என்ற வடசொல். பாவோடு நிறத்தினே (இராகத்தினே) இசைத்தலால் இசையெனப்பட்டது. பண்ணுதல் என்னும் வினையடி யாகப் பிறந்தது பண். மிடற்றுப்பாடல், குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளின் ஒலி, இவற்றின் கால அளவினை வரையறுக்கும் தாள அமைப்பு ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவது இசையாகும்.

இசைக்குரிய சுரங்கள் ஏழாகும். ஏழிசையாய் இசைப்பயனப் (7-81-10) எனவும், ஏழிசை யேழ் நரம்பின் ஓசையை (7-88-6) எனவும் வரும் திருப் பதிகத் தொடர்கள், இசை ஏழென்றும், அவ்வேழிசை களையும் தனித்தனி நரம்புகளின் இசைத்து அறியும் முறையில் அக்காலத்தில் நரம்புக் கருவிகள் அமைந் திருந்தன என்றும் புலப்படுத்துவன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன ஏழிசைகளைக் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயர்கள்.

இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய செம் முறைக் கேள்வி என்னும் சகோட யாழிலே உழை முதல் கைக்கிளே யீருகப் பதின்ைகு நரம்புகள் கட்டப் பட்டிருந்தன. அவை

மெலிவு சமன் வலிவு

| |

|

உ.இ.வி.கா. கு. து. கை. உ. இ. வி. தா. கு. து. கை