பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கன் 511

எண் பெற்றது. செந்துருத்தி. இது, செம்பாலேயிலே தோற்றிய திறமாதலின் செந்திறம் என வழங்கப் பெறும். இப்பண் ஏழாந்திருமுறையில் 95-ஆம் பதிகத் தில் அமைந்துளது. நாரத சங்கீத மகரந்தம் என்ற நூலில் ம-முதலாகிய மூர்ச்சனேயில், ரி, த இல்லாமல் தோற்றுவது மதுமாதவி என்ற இராகம் எனக் குறிக்கப்பெற்றது. சடமுதலாகிய சரி.கிமபதிந என்னும் செம்பால் (அரிகாம்போதி) நிரலில் கி, தி நீங்க எஞ்சி நிற்கும் ரி ம ப ந’ என்பது இதன் உருவம் எனவும், 'மதுமாதவி' என்ற பெயரே மத்தியமாவதி எனத் திரிந்தது எனவும் கொள்வர் யாழ் நூலார்.

69. தக்கேசி

மருதப் பெரும்பெண்ணின் நவிர்’ என்னுத் திறத்தின் அகநிலையாய்ப் பண் வரிசையில் 69 என் னும் எண் பெற்றது. தக்கேசி. இப்பண், முதல் திரு முறையில் 63 முதல் 74 வரையுள்ள பதிகங்களிலும், ஏழாந்திருமுறையில் 54 முதல் 70 வரையுள்ள பதிகங் களிலும் பொருந்தியுளது. இதனை 'டக்க கைசிகம்’ என வழங்குவர் சாரங்கதேவர்.

"தைவதி, மத்தியமா என்னும் ஜாதி ராகங்களி லிருந்து தோன்றித், தைவதத்தை முதல் முடிவு கிழமையாகக்கொண்டு காகலி அந்த ரத்தோடு கூடி உத்தராயதா என்னும் மூர்ச்சனையையுடையது, டக்க கைசிகம். இது, இளிவரல் அச்சம் என்னும் சுவை களைப் பெற்றது : மகாகாளருக்கும் மன்மதனுக்கும் உவப்பை விளைவிப்பது” என்றும், மத்திமத்தை முதலாகவும் கிழமையாகவும் தைவதத்தை முடிவாக வும் பெற்று நிகசத என்னும் இசைகளோடு கூடி நின்ற திராவிடி என்னும் இராகம் டக்க கைசிகத்தின் விபாஷா ஆகும்” என்றும் சங்கீத ரத்தனகரம் கூறும்.