திருத்தொண்டர் புராணம் 重尊Q蓋
கல்லாடரோ தம் பாடல்களிற் குறிப்பிட்டதாகக் கூறுதற்கு இடமில்லை.
முக்கணப்பணுகிய கானத்தியிறைவர், தம் ஒரு கண்ணில் உதிரம் ஒழுக இருந்த நிலை கண்டு மனங்கலங்கிய திண்ணணுர், மது கண்னென்றை அம்பினுல் இடந்து காளத்தியப்பரது புண்பட்ட கண்ணில் அப்பி உதிரம் நின்றமை கண்டு மனம் மகிழ்ந்த செய்தியினை,
இதுதனைக் கண்ட என் கண் தனை விடந்து கடவுள் தன் கண்ணுது புண்ணில் அப்பியுங் காண்பனென்ருெரு கண் ணிடைக் கணையது. மடுத்துக் கையில் வாங்கி அனேதர ஆப்பினன் அப்பலும் குருதி நிற்பதொத் துருப்பெறக்கண்டு நெஞ்சு கந்து '
என்ற தொடரில் முடித்துக்காட்டி, இறைவரது மற்றைக் கண்ணிலும் அவ்வாறே குருதியொழுகத் தன் மற்ருெரு கண்ணைப் பெயர்த்து எடுத்தற்கு முற்பட்ட செய்தியை
மற்றைக் கண்ணிலும் வடிக்கனை மடுத்தனன்
என்ற தொடரினுல் நக்கீசர் வேறு பிரித்துக் கூறியுள்ள மையும், இவ்விரு செய்திகளையும்,
முக்கணப்பனுக் கொருகனில் உதிரம் தக்கினத்திடை யிழிதர அக்கணம் அழுதுவிழுந்து தொழுதெழுந் தரற்றிப் புன் மருந்தாற்றப் போக தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது . எனவும்,
மற்றை ஒண்திருநயனம் பொழிந்த கண்ணிர்க் கலுழியொங்க அற்றதென்று மற்றைக் கண்ணையும் பகழித் தலையால் அகழ’ எனவும் வரும் தொடர்களில் கல்ல: ட தேவர் முறையே குறித்துள்ளமையும் இங்குக் கூர்ந்துரைத் தக்கனவாகும்.
சம்பந்தர் பசி வருத்த அழுதார் என்று பட்டினத் தடிகள் கூறியதை, நீரில் மூழ்கிய தந்தையாரைக் காணுத அச்சத்தால் அழுதார் என்று சேக்கிழாரடிகள் மாற்றி அமைத்தார் என்பர் அறிஞர் இராசமாணிக்களுர் ஆளு