பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1058

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1042 பன்னிரு திருமுதை வரலாது

  • தொழுவார்கள் தம் மும்மை மாமலங்களற வீடருள்தில்லை மல்ல லம்பதியின்

எல்லை வணங்கி (பெரிய தடுத்தாட் -92) எனவும்

தொல்லேவின, ஆசுடைய மலமூன்றும் அனையவரும் பெரும்பிறவி, மாசுதனை விடக்கழித்து '

(பெரிய - திருக்குறிப்பு - 114) எனவும்,

  • மருள்பொழிமும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம்’

(சிறுத்தொண்டர் - 85) எனவும் வரும் தொடர்களில் ஆசிரியர் குறித்துள்ளார்.

மேற்குறித்த மூன்று மலங்களுடன், ஆணவ மலத் துடன் கூடி நின்று அதனைக் கழலும் பக்குவமுடையதாகச் செய்யும் இறைவனது மறைப்புச் சத்தியாகிய திரோதமலத் தினையும் ஆன்மாக்களுக்குத் தனுகரண புனே பே கங்க ளாய்க் காரியப்படும் சுத்தமாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவங்களையும் கூட்டி மலம் ஐந்து எனப் பகுத் துரைக்கும் வழக்கம் உண்டென்பது,

மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்து தவே '

நீத்தல் விண்ணப்பம் - 29)

எனவரும் திருவாசகத் தொடரால் அறியப்படும்.

தன் பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார் ’ (பெரிய கன்ன ப்யர் - 1541 எனவும்,

  • இருவினைப்பாச மும்மலக்சல் ஆர்த்தலின்

வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளுமெய் யஞ்செழுத் தரசை யிக்கடல் ஒருகல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமே

(திருதாவுக் - 129; எனவும் வரும் தொடர்களில் ஐவகை மலங்கள் குறிக்கப் பெற்றுள்ளமை உய்த்துணரத் தகுவதாகும்.

ఖిత్తాశఊrడితే செய்கின்ற உயிர்களும், அவ்வுயிர் களாற் செய்யப்படும் நன்றுந் தீதுமாகிய வினைகளும், அவ் வினை காரணமாக உயிர்களைச் சேர்தற்குரிய இன்ப துன்பங் களாகிய நுகர்ச்சிகளும், உயிர்கள் செய்த வினைப் பயன்