பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46giâ€ಹಕಿಹ67 # ಣಮಿಣು (11) 117 நாளுக்குநாள் குளிர்வரைப் பக்கமாகிய மலைச் சாரலில் தொடங்கி, அவ் வளர்பிறை மதியத்தின் நிலவொளி உலகிற் பரந்தாற்போல, நாளுக்குநாள் பெருகும் வெள்ளத்தை நிலப்பகுதிகளுள் எல்லாம் பரப்பியது. இவ்வாறு உலகம் பயன்பெற்றுச் சிறக்குமாறு தன் நீர்வளத்தைப் பரப்பியதாய், வையை, உயிர்களைப் பாதுகாத்தலையும் செய்தது. அடுத்து, வரும் தேய்பிறைப் பக்கத்துள், தேவர்களின் உணவாதலையுடைய மதியமானது, நாளுக்குநாள் தேய்ந்து போவது போல, வையைக்கண் நீர்வரவும் சுருங்கிக் கொண்டே வந்தது. ஆயினும், தேய்பிறை எட்டாம்நாளில் விளங்கும் பாதியளவான மதியைப்போல அதன்வரவு பாதியளவுக்கே குறைந்து வந்தது. ஆனால், நிறைமதியானது நாளுக்குநாள் குறைவுற்று முற்றவும் தேய்ந்து அமாவாசையாவது போல, வையை வரவு முற்றவும் குறைந்து இல்லாமற் போயினதைக் கண்டவரோ யாருமிலர். மலையின் மேலிடத்திலிருந்து போந்து வந்த, மாட்சியமைந்த அணிகளைக் கொண்டாளான வையைப் பெண்ணாளே! நின் புதுவரவு சுருங்கிய நாளினும் மக்கள் பயன்பெறுமாறு நீதான் நின் விரைவு தணிந்தாயாய்ச் செல்வாயாக - - - சொற்பொருள் : அலர் தரு பக்கம் - வளர்பிறைப் பக்கம். வழியது பக்கம்-வளர்பிறையின் பின்னதாகிய தேய்பிறைப் பக்கம் சேண் உயரம் யாணர் - புது வருவாய். இறுநாள் - நீர் சுருங்கிய நாள். வயம் - வேகமாகிய வலிமை. * . - விளக்கம்: நிலவாயினும் முற்றத் தேய்தலென்னும் குறையை உடையது வைவையோ அதனையும் இலாதது என, அதன் சிறப்பைக் கூறினர். நிலவு தண்கதிர்களால் உயிர்களின் உள்ளத்தே இன்பத்தை நிறைக்கின்றது; ஆயின் வையைப் புதுப்புனலோ உலகிடத்து நீர்வளத்தைப் பரப்பிப் புதுவருவா யாகிய செழுமையைத் தருகின்றது என்பதுமாம். நீராடற்கு அமைந்தது. மாமயில் அன்னார் மறையிற் புணர்மைந்தர் காமம் களவிட்டுக் கைகொள்கற் புற்றென, மல்லற் புனல்வையை மாமலை விட்டிருத்தல் இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல் எனவாங்கு, - - 45 கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை படையொடுங் கொண்டு பெயர்வானைச், சுற்றம் இடைநெறித்தாக்குற்ற தேய்ப்ப, அடல்மதுரை ஆடற்கு நீர் அமைந்தது யாறு