பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புலியூர்க்கேசிகன்_பரிபாடற் பகுதிகள் (1) 219 திருமால் அவனுக்குரிய அரவுப் பாயலுக்கும் தனிக் கோயில் இருந்தது என்று கொள்க. விளக்கம் : ஆதிசேடனின் கோயிலில் அவனை வழிபட்டுப் போற்றுவதற்காக வந்து நிற்கும் ஆடவரும் மகளிருமாகிய அடியவர் திருக்கூட்டத்தின் சிறப்பைக் கூறுகின்றனர். இடை யொழிவின்றி இவர் அத்துணை நெருக்கமாகப் பெருந்திர ளாகவும், இடையீடின்றியும் வந்து தொழுது செல்வாராயினர் என்க. இவரெல்லாம் வந்து திரண்டனர் என்பது அவ்வூரவரின் தெய்வ வழிபாட்டில் திளைத்த சிந்தையைக் கூறுவதாகும். நாகர் நகர் - வண்டொடு தும்பியும் வண்தொடை யாழார்ப்ப 50 விண்ட கடகரி மேகமொடு அதிரத் தண்டாஅருவியொடு இருமுழவு ஆர்ப்ப அரியுண்ட கண்ணாரோடு ஆடவர் கூடிப் புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்றச் சூடு நறவொடு காமமகிழ் விரியச் .55 குடா நறவொடு காமம் விரும்ப . . இனைய பிறவும் இவைபோல் வனவும் அனையவை எல்லாம் இயையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர்; - புனைதற்றொழிலிற் சிறந்த அணிகலன்கள் விளங்க, அழகு டன் திகழும் திருமுடியைக் கொண்டவன் ஆதிசேடப்பெருமான். அவன் திருக்கோயிலிடத்தே மேலும் பலவாக விளங்கிய சிறப்புகளைக் கூறுகின்றனர். - - - வண்டினத்தோடு தும்பியினமும் கலந்து, வளவிய நரம்பின் தொடர்ச்சியைக் கொண்ட யாழிசையோடும் சேர்ந்து ஒலித்த படியே இருந்தன. பிளிறுகின்ற மதயானைகளின் முழக்கத்தோடு மேகங்களின் இடிமுழக்கமும் சேர்ந்து முழங்கின. நீங்காத அருவி முழக்கத்தோடு பெரிய முழவுகளின் ஆர்ப்பொலியும் சேர்ந்து ஒலித்தன. - - செவ்வரியோடு மையுண்ட கண்களினரான இளமகளி ரோடு ஆடவரும் (கூத்தியரும் கூததரும்) சேர்ந்து, விரும்பத்தகுந்த பாடல்களைப் பாடுவதோடு ஆடலையும் நிகழ்த்தியபடி விளங்கினர். இவற்றைப் பலரும் கண்டு களிக்க அவர் நிகழ்த்தினர். சூடுதற்குரிய நறவமான நறவம் பூவோடு, அவற்றைச் சூடியுள்ள மகளிரின் உள்ளத்தே காம இச்சையும் அரும்பி மலரத் தொடங்கியது. சூடா நறவமாகிய கள்ளோடு காவின்பத்தையும் அங்கிருந்தார் விரும்பலாயினர். இவுையம், இவைபோற் பிற இன்பமூட்டும் நிகழ்ச்சிகளும், மற்றும் பிறவும் ஆகிய அத்தன்மையவெல்லாம் நாகர் நகரிற் பொருந்தியிருந்தன.