பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lിഴ്ക്കേീട് * അഖണ്ഡ () 55 வாரம், பனுவல் நூலறிவு. புலம் அறிவு. கவிதை - பாட்டு. மாறாமை - அதன் கருத்து அவ்வாறே பிறழாதே நிலைபெறுதல். வினை தொழில். நந்த பெருக. தண்ணம் புனல் - குளிர்ந்த அழகிய புனல் அம் - அழகு, அது மலையினின்றும் சுமந்துவரும் பல்வகை மலர்களாலும் தழைகளாலும் உண்டாவது. விளக்கம் : கார்காலம் தொடங்கவும் மலையிலே மழை பொழிகின்றது; அம் மழை நீரானது அழகுடனும் தண்மையு டனும் வையையில் நிரம்பி வருகின்றது; அதனால் எங்கனும் புத்துணர்வு எழுகின்றது. மக்கள் மனக்கிளர்ச்சி கொள்ளு கின்றனர். - | - •. - - காதலர்களிப்பு புகைபூ அவி யாராதனை அழல் பல ஏந்தி நகை யமர் காதலரை நாளணிக் கூட்டும் வகை சாலும் வையை வரவு: வையை பெருகிவருகின்றது.புதுநீரில் திளைத்தாடமதுரை மக்கள் எழுகின்றனர். அவர்களுள் இளைஞரும் கன்னியரும் பெரிதும் களிப்போடு செல்கின்றனர். புகைத்தற்குரியனவும், சூடிக்கொள்வதற்கான பூவும், வழிபாட்டிற்குரியன வாகிய பொருள்களும், நெருப்பும் ஆகிய பலவற்றையும் கைகளில் ஏந்தியவராக அவர்கள் செல்கின்றனர். மகிழ்ச்சி பொருந்திய தம் காதலரை அந் நீர்விளையாட்டுக்குரிய நாளணிகளை அணியச் செய்விக்கின்றனர். வையை ஆற்றின்கண் வரும் புதுவெள்ளத்தின் வரவு, காதலரின் இம்முறைமைகளுக்கெல்லாம் பொருந்துவதாக விளங்குகின்றது. சொற்பொருள் : புகை- அகில் சாந்தம் முதலியவான புகைத்தற்குரிய பொருள்கள்; அவை நீராடிய பின்னர் மகளிர்தம் கூந்தற்கு நறுமணப்புகை ஊட்டுவதற்கு ஆகும். பூ மலர்கள் மகளிர் சூடிக்கொள்வதற்கு அவிஆராதனை - அவியாகிய வழிபாட்டிற்குரிய பொருள்கள். அழல் - நெருப்பு: புகைப் பொருள்களை இட்டுப்புகைப்பதற்கு நாளணிவிழா நாளுக்குரிய உடையும் பிறவுமாகிய அலங்காரங்கள் வகை முறைமை. விளக்கம் : புதுநீரின் வரவறிந்த காதலருள்ளம் களிப்புக் கொள்ளுகின்றது. வெள்ளத்தில் திளைத்தாட விரும்பிய அவர்கள், அதற்கான பொருள்களோடு, முறையாகப் புறப்படு கின்றனர். - |