பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5


3. ' என்ன அப்பா, இத்தனை நாள் என்னைத் தெரிந்திருந்து ஒரு சிபாரிசு காகிதம் கொடுக்க பால்மாறுகிறாயே ' என்றார், -

சரி ,இவரை அனுப்பிவிட வேறுவழியில்லை என்று ஒரு யுக்தி செய்தேன்-காகிதம் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு, " உன் னுடைய பந்துபேர் என்ன?" என்றேன்.

கலியாண சுந்தரம் ஐயர் ”-என்றார்.

ஒரு சமாசாரம்-நான் பொய் பேசமாட்டேன்-உனக்கு தெரியுமோ இல்லையோ ?”

யார் உன்னை பொய் பேசும்படி கேட்டது?" என்று கேட்டார். " ஆனால் சரிதான் ' என்று சொல்லி விட்டு-பின் வருமாறு கடிதம் விரைவில் எழுதிக் கொடுத்தேன்.


மார்னிங்டன் துரை அவர்களுக்கு ஐயர்-உங்களை எனக்கு முன்பின் தெரியாது. உங்கள் பாங்கில் ஏதோ வேலை காலியா யிருக் கிறதாம். அதற்காக, என் பால்ய சிநேகிதர், தன் பந்து ஒருவனுக்கு (அவர் பெயர் கல்யாண சுந்தரம்) சிபாரிசு காகிதம் கொடுக்கும்படி கேட்கிறார்.-அந்த கல்யாண சுந்தரத்தை நான் பார்த்ததேயில்லை. அவனுக்கு நீங்கள் காலியாயிருப்பதாகச் சொல்லப்பட்ட வேலையைக் கொடுப்பதானால்-கொடுக்கலாம் ”


" இது சரியா யிருக்கிறதா பார் ' என்று அவரிடம் காண்பித் தேன். இதைப் படித்துப் பார்த்து விட்டு கோபத்துடன் ' என்ன இப்படி எழுதினாயே ' என்றார், அதற்கு நான், 'பொய் பேசாமல் வேறு நான் என்ன எழுதுவது சொல்' என்று கேட்க, பதில் ஒன்றும் சொல்வதற்கில்லாமல் " நான் வந்த வேளை தவறு ' என்று சொல்லிக் கொண்டே சரேலென்று இறங்கிப் போய் விட்டார்.


எனக்கும் அவர் கடைசியில் சொல்லி விட்டுப் போன வாக்கியம் சரியென்று தோன்றியது.


அப்புறம், இனியாவது சாவகாசமாய்த் தடையின்றி எழுதலா மென்று தீர்மானித்து மேஜையின் பேரில் வைத்திருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தேன்.-அதில் ' முதல் '-என்று எழுதியிருந்ததைக் கண்டேன். என்ன முதல் ? என்று யோசித்துப் பார்த்தேன்.-புரிய வில்லை என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கீழே என் வேலையாள் சபாபதி, யாருடனோ உரத்த சப்தமாய்ச் சச்சர விட்டுக் கொண்டிருக்கும் கோஷ்டம் கேட்டது. அதன் பேரில், "யாரடா அது சபாபதி ' என்று நான் கேட்க, 'இல்லங்கோ யாரோ தந்தி ஆபிசிலிருந்து வந்திருக்கிறார், உங்களைப் பார்க்க வேணு