பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


 அங்கே, சின்னச்சிட்டுகள் இரண்டும், வழக்கம் போலப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன.

அம்மாவைக் கண்டதும், ஆசையோடு வந்து அருகில் உட்கார்ந்து கொண்டன.

"அம்மா, தின்ன என்னம்மா கொண்டு வந்தாய்?" என்று ஆவலாகக் கேட்டன.

“இப்பொழுது, தீனி ஒன்றும் சொண்டு வரவில்லை. ஆனால் உங்களுக்குச் சீனி போல் இனிப்பான செய்தி ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்” என்று அம்மாச் சிட்டு கூறியது.

“என்ன என்ன?" என்று இரண்டு சிட்டுகளும் குதித்துக் கொண்டு கேட்டன.

“உங்களை நாளைக்குப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடப் போகிறேன். தலைமை ஆசிரியை உங்களைச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டு விட்டார்கள்” என்று அம்மா கூறியது.

இந்தச் செய்தியைக் கேட்டதும், இரண்டு சிட்டுக்களும் குதித்துக் குதித்துப் பறந்தன.