இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15
வகுப்பில் இருந்த பிள்ளைகளுக்கு இந்த சிட்டுக்குருவிகள் படிக்க வந்ததிலிருந்தேஒரே கொண்டாட்டம். ஆசிரியை, வராதநேரங்களில் இந்தக் குருவிகளோடு எல்லாக் குழந்தைகளும் விளையாடின.
வர, வரப் பிள்ளைகளின் கவனம் பாடத்தில் செல்லாமல், சிட்டுக் குருவிகளோடு விளையாடுவதிலேயே காலம் சென்றது. இதனால் அந்த மாதத் தேர்வில் எல்லாப் பிள்ளைகளுக்கும் மதிப்பெண் குறைந்து விட்டது.