இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124 -- பாட்டும் தொகையும்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை; நிறையெனப் படுவது மறை பிறர் அறியாமை; முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்: பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.
-கலித்தொகை 133: 6-14
இவ்வாறாகக் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகைப் பாடல்கள் அகப்பொருள் நுட்பம் வாய்ந்தனவாய், வாழ் வியல் உண்மைகளை வகைமை பெற எடுத்துரைப்பன வாய் அமைந்து, படிக்குந்தொறும் இன்பம் பயப்பனவாய் அமைந்துள்ளன.