பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பாட்டும் தொகையும்

வீசுவதும், போதுமென்று கையமைத்தற்குக் காரணமான கடிப்பினையுடையதுமாகிய மதுவைப் பொற்கலத்திலே ஊற்றி நாள்தோறும் நல்குவான்; நின் மனைவியாகிய பாடினி தன் கரிய குழலிலே சூடிக்கொள்ளப் பொற்றா மரைப் பூவை வழங்குவான். அவர்கள் தன் மார்பிலே அணிந்துகொள்ளப் பொன்னரி மாலையையும் வெண் முத்துமாைைலயையும் நல்குவான். நான்கு வெண்புரவிகள் பூட்டப்பட்ட பெரிய தேரிலே உங்களை ஏற்றுவித்து ஏழடி பின்னே வந்து அனுப்பிவைப்பான். இவ்வாறு பாணர்களுக்கு வழங்கும் முறையில் வழங்கிய பின்னர், நல்ல பல ஊர்களையும், யானைகளையும் நீங்கள் பிறருக்கும் வழங்கத்தக்க வகையில் அவன் கொடை வழங்குவான் எனத் தான் வழியிடையே கண்ட பொரு நனைப் பரிசுப் பெற்று மீண்டுவரும் பொருநன் ஆற்றுப் படுத்துகின்றான்.

பழுமரம் உள்ளிய பறவையின் யானும்அவன் இழுமென் சும்மை இடனுடை வரைப்பின் கசையுநர்த் தடையா கன்பெரு வாயில் இசையேன் புக்குஎன் இடுப்பை தீர எய்த்த மெய்யேன் எய்யே னாகிப் பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக் கைக்கசடு இருந்தஎன் கண்ணகன் தடாரி இருசீர்ப் பாணிக்கு ஏற்ப விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் ஒன்றியான் பெட்டா அளவையின்

-பொருநராற்றுப்படை : 64-73

பாட்டுடைத் தலைவனாகிய கரிகாற்பெருவளத் தானின் பெருமை இந்நூலுள் ஆங்காங்கே பரக்கப் பேசப் படுகின்றது. அவன் அறநெறி பற்றிச் செங்கோல் ஒச்சுபவன் என்றும் போர்க்களத்தில் பேராண்மை காட்டிப் போர் புரியும் ஆற்றல் சான்றவன் என்றும்