பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பெண்களே கோபத்தை அடக்காதீர்கள்

கரங்களில் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களைப் பெண்கள் ஓட்டுவதைப் பார்த்தோ, அல்லது வேலைக்குச் செல்வதைப் பார்த்தோ, பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று கணிப்பது சரியல்ல. பெண் உரிமைக்காகப் போராடும் இயக்கங்கள், ஆங்காங்கே உள்ள நிலையிலும், இலட்சக்கணக்கான பெண்கள், இரண்டாம் தரக் குடிமக்களாகவே இன்னமும் நடத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, இன்னமும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்கு கணவனின் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் மனைவிக்கு உள்ளது. இதே போன்று பெற்றாேர் வீட்டுக்குக் கணவனுடன் தான் செல்ல வேண்டும் என்ற நிலையும் உள்ளது. பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நிலை வருத்தத்துக்குரியது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இன்னமும் சமூகத்தில், பெண்களின் நிலை, ஆண்களை விடத் தாழ்ந்த தாகத்தான் உள்ளது.