பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

121

முன்கூட்டியே வந்தால் : பேச்சுத்திறனை இழந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையாலோ, காது கேட்கும் கருவியாலோ, பேச்சுப் பயிற்சி அளித்து நன்றாகப் பேச வைத்துவிடலாம். குழந்தையின் கேட்கும் திறனை, உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர் கூறுவதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்தாலோ, தொலைக்காட்சியில் கூடுதல் ஒலி வைப்பதாலோ காது கேட்காமல் இருப்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம். காது கேளாத குழந்தையை 8, 9 வயதில் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதில் பயனில்லை.

காது கேளாமையைக் கண்டுபிடிப்பதற்கு, Audio Metry imedance. OAE/ BERA போன்ற பாிசோதனைகள் உள்ளன. பரிசோதனைகளில் காது கேளாமை உறுதி செய்யப்பட்டபின், நாட்களை வீணாக்காமல், உடனடியாக அறுவைசிச்சைசையோ, அல்லது காது கேட்கும் கருவியையோ, பொருத்தவேண்டும்.

முற்றிலும் காது கேட்காவிட்டாலும் கூட காக்ளியர் : (Cochlear) என்ற நவீன காது கேட்கும் கருவியைப் பொருத்தி, முற்றிலும் காது கேட்கும் திறனை இழந்ததை, குழந்தைகளையும், வயதானவர்களையும் காது கேட்க வைக்க முடியும். இக் கருவி, ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படுகிறது. காதின் உள்புறம் உள்ள மிக நுண்ணிய உறுப்பான காக்ளியா (நத்தைக்கூடு) பழுதடைந்த நிலையில், அறுவைசிகிச்சை மூலம், அதனுள் 22 அல்லது 24 மின்தகடுகள் பொருத்தப்படும். ஓசைகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் செவி நரம்புகள், இந்த காக்ளியாவில் இருந்து துவங்குவதால், பழுதடைந்த காக்ளியாவில் இருந்து, இந்த மின்தகடுகள் செவி நரம்புகளை நேரடியாகத் தூண்டும். இக் கருவி பொருத்தும் சிகிச்சைக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’, என்று பெயர்.