பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புட்டிப் பால் வேண்டவே வேண்டாம்!

‘குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்றார் வள்ளுவர். மழலைச் சொல்லின் இனிமை, ஒப்பிட முயாதது என்பதற்காக அவர் இவ்வாறு கூறினார்.

மழலைச் சொல்லின் இனிமையைக் கேட்டு ரசிக்க வேண்டுமானால், குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், பெற்றோர் உரிய முக்கித்துவம் கொடுப்பது அவசியம். கர்ப்பம் ஊர்ஜிதமானவுடனேயே, கருவில் வளரும் குழந்தையை நல்ல முறையில் பெற்றேடுத்து, எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது குறித்துத் தாய் திட்டமிடுதல் அவசியம்.

கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன் மருத்துவனையில் இருக்கும் மகப்பேறு மருத்துவரை நிர்ணயித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மாதா மாதம் கருவைச் சோதனை செய்யும்போது, மருத்துவச் சோதனைகள் செய்து கொள்ள அனைத்து வசதிகள் நிறைந்த மருத்துமனையாக இருப்பதே நல்லது.