பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" "வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்பு கண்டார்" என்று தனது திட்டத்தை நம்முன் வைத்து அதை நிறைவேற்ற நமக்குக் கட்டளையிடுகிறார். "தமிழ்ச் சாதி' என்னும் தலைப்பில், 'சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும், திருக்குறளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், எல்லையொன்றின்மையெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழ்ச்சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன் என்று குறிப்பிட்டு தமிழகத்தில் உள்ள போலிப்புதுமை வாதிகளுக்கும். பழமை வாதிகளுக்கும் இடையில் நடைபெறும் வழக்காடல்களைக் கண்டனம் செய்து, தனது கருத்தாக, "நன்மையும் அறிவும் எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ் வீராயின் அச்சமொன்றில்லை" என்று கூறுகிறார். பாரதியின் இந்தக் கருத்து எக்காலத்துக்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்துவனவாகும். அது வீண் பழம் பெருமை பேசும் பழமை வாதிகளுக்கும் போலிப் புதுமை வாதிகளுக்கும் சிறந்த அறிவுரையாகும். சுயசரிதையில் பாரதியின் கவிதைகளில் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு சுயசரிதைத் தொகுப்பாகும். அத்தொகுப்பில் ஆங்கிலப் பயிற்சி என்னும் தலைப்பில் ஆங்கிலேய ஆட்சியினர் நமது நாட்டில் புகுத்திய கல்வி முறையைப் பற்றி பாரதியார் கடுமையாகக் குறை கூறிச்சாடுகிறார்.அதில் நமது நாட்டில் முன்பு வரலாற்று மரபில் எழுந்து வளர்ச்சி பெற்றிருந்த அறிவுச் செல்வங்களைப் 母北 பற்றி பாரதி சுட்டிக் காட்டியிருப்பது மிகச் சிறப்பான செய்தியாகும். பாரத நாட்டிற்கான ஒரு புதிய கல்வித் திட்டத்தின் பகுதியாக ஒரு புதிய கல்வி கொள்கையை பாரதி வலியுறுத்திக்கூறுவதையும் காண்கிறோம். பாரதி கூறு அந்தப் புதிய நமது நாட்டிற்குகந்த கல்விக் கொள்கை இன்றும் நமக்கு பொருந்துவதாக உள்ளது. முன்பு பாரத நாட்டில் அடிப்படைக் கல்வி எழுத்தறிவித்த அனைவருக்கும் இருந்தது. ஊர்தோறும் தெருக்கள் தோறும் திண்ணை பள்ளிக்கூடங்கள் மூலம் அடிப்படைக் கல்வி நடத்தப்பட்டு வந்தது. அதற்கு பல்வேறு சிறப்புக் கல்விக்காக மொழி இலக்கியம் இலக்கணம், இயற்கை அறிவியல், பொருளாதாரம், கணிதம், வாணிபம், சமூக அறிவியல் முதலிய பல்வேறு துறைகளை போதிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் பல பெரிய பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன. நளாந்தா, பாடலிபுத்திரம்,தட்சசீலம், காஞ்சிவரம், மதுரை முதலிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. உலகப் பிரசித்தி பெற்றவை. பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அப்பல்கலைக்கழகங்களில் பல துறைகளிலும் பயிற்சி பெற்று வந்தனர். மதுரை பல்கலைக்கழகத்தில் தத்துவ ஞானத்துறையில் மட்டும் பதினேழாயிரம் மாணவர்கள். ஆராய்ச்சியாளர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்ததாக ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. அன்னிய ஆட்சியாளர்கள் நமது நாட்டின் பாரம்பரியமான மரபு வழியிலான கல்வி முறையை சிதைத்து சேதப்படுத்தி அழித்து விட்டார்கள் குறிப்பாகஆங்கிலேய ஆட்சியாளர்கள் பழய கல்வி முறையை மா ற்றி விட்டு தங்களுடைய ஆங்கிலேயக் கல்வி முறையைச் செயல்படுத்தினார்கள். நமது நாடு விடுதலை பெற்றவுடன் நமது கல்விக் கொள்கையிலும் திட்டங்களிலும் மாற்றங்கள் காணவும், புதிய கல்விக் கொள்கையையும் பாடத்திட்டங்களையும் வகுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பல முறை.இதுபற்றி பல குழுக்கள், அமைத்தும் மத்திய அரசில் கொள்கை விவாதங்கள் நடைபெற்று முடிவுகளும் எடுக்கப்பட்டன. பல பரிந்துரைகளும் செய்யப்பட்டன. ஆயினும் அத்தீர்மானங்ககள் சரிவர செயல்படவில்லை. செயலுக்கு வரவில்லை என்றே கூறலாம். இன்றும் கூட நமது பாடத் திட்டங்களில் அடிப்படையில் பழைய ஆங்கிலக் கல்வியின் வழிமுறையே நீடிக்கிறது என்பதைக் காண முடிகிறது. ஆங்கிலேயர்ஆட்சிகாலத்துக்கல்விமுறையைப் பற்றிபாரதிகூறுகிறார். "நரியுயிர்ச்சிறு சேவகர் தாதர்கள் நாயெனத் தெரியொற்றர் உணவினைப் பெரிதெனக் கொடு தம்முயிர் விற்றிடும்