பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பாரதியின் விடுதலைநோக்கின் பன்முகப்பரிமாணங்கள் பாரதியின் விடுதலை லட்சியங்கள் பரந்த பன்முக வடிவங்களையும் பரிமாணங்களையும் கொண்டதாகும். பாரதி காலத்திலே அன்னிய ஆட்சி வலுவாக அமர்ந்திருந்தது. ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகள் மலிந்திருந்தன. பாரத மக்களுக்கு எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தன. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வன வாசம் என்னும் தமிழ் சொற்களில் பாரதி தனது அனுபவத்திலிருந்தே தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்திய மக்களுடைய வாழ்க்கை நிலை மிகவும் மோசமாக இருந்தது. பஞ்சம், பசி, பட்டினி, பட்டினிச்சாவுகள், வேலையின்மை, நோய், நொடி, சுகாதாரக் கேடுகள், அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள், தொல்லை இகழ்ச்சிகள் மலிந்திருந்தன. இன்னும் அடித்தட்டு மக்களிடையில், இந்தக் கொடுமைகள் மிக அதிகமாகப் பரவியிருந்தன. இந்த நிலைமைக்கு அன்னிய ஆட்சியின் சுரண்டல் கொள்ளைகளும். நேரடிக் கொள்ளைகளும், கொடுமைகளும் முக்கியமான முதன்மையான காரணமாக இருந்தன. வரிக்கொடுமை, வட்டிக் கொடுமை, விலைக் கொடுமைகளுடன் இயற்கைச் செல்வங்களும் ஆட்சியாளர்களால் சூறையாடப்பட்டன. பழைய பாம்பரையான தொழில்கள் எல்லாம் நலிவடைந்தும், நசிவடைந்தும் புதிய தொழில்கள் வளர விடாமல் தடுக்கப்பட்டும் நாடு நாசமடைந்து கொண்டிருந்தது. இவையெல்லாம் நாட்டு மக்களின் வறுமை நிலையை மேலும் அதிகரிக்கச் செய்துகொண்டேயிருந்தது.அதையே பாரதி'பொழுதெல்லாம் எங்கள்செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ" என்று பாடினார். இந்தத் தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை. இன்னும், நாட்டு மக்கள் மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்ந்தனர் என்று பாரதி கூறினார். அதனால், நாட்டு மக்களின் பிணியும் வறுமையும் நையப்பாடினான். கவலைகள், சிறுமை, நோவு கைதவம் வறுமைத் துன்பம், புலை அச்சம் முதலிய பேய்கள் எல்லாம் நிறைந்திருந்தன. அன்னிய ஆட்சியாளர்கள் பொருளினை சிதைத்தனர். மருளினை விதைத்தனர் என்று பாடினார். அச்சமும், பேடிமையும் அடிமைச் சிறுமதியும் நிறைந்திருந்தன. ஊக்கமும் உள்வலியும் உண்மையில் பற்றும் இல்லாமலும் மக்களில் பலரும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உலகத்து நாடுகளில் எல்லாம் (வையத்து நாட்டிலெல்லாம்) தாழ்வுற்று. வறுமை மிஞ்சி. விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றது பாரத தேசம், புதிய ரஷ்யாவைப் பற்றிய பாடலில் கூட பாரதி, "இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேரிசைந்த பாவி' என் றும், ՏՑ "பொய், சூது தீமையெல்லாம் ஆரண்யத்தில் பாம்புகள் போல மலிந்து வளர்ந்தேங்கினவே" எனறும, "உழுது விதைத்தறுப்பாருக்குண வில்லை பிணிகள் பல உண்டு. பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க ளுண்டு உண்மை சொல்வோருக் கெல்லாம் எழுதரிய பெருங் கொடுமைச் சிறையுண்டு தூக்குண்ைேடயிறப்பதுண்டு" செம்மையெல்லாம் பாழாகி கொடுமையே அறமாகி இருந்ததாக, இந்திய நாட்டில் இருந்த அன்னிய ஆட்சியை நினைந்தே பாரதி பாடியிருக்கிறார். இத்துடன் இந்திய சமுதாயத்தின் உள்வலியும் குறைந்திருந்தது. சாதி மதவேறுபாடுகள், மாறுபாடுகள், பாகுபாடுகள், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகள் முதலியன நிலவியிருந்தன. மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து. வெறும் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரவியிருந்தன. 'அஞ்சி அஞ்சிச் சாவார் மந்திரவாதி என்பார் எந்திர சூனியங்கள் என்பார் சிப்பாயைக் கண்டஞ்சுவார்" "யாரிடத்தும் பூனைகள் போல் அடங்கி நடப்பார் கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ சாத்திரங்கள் ஒன்றும் கானார். தம்மைச் சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் கஞ்சி குடிப்பதற்கிலார் எண்ணிலா நோயுடையார் இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் ஜாதி நூறு சொல்வார், சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை"