இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42 பாரதிதாசன்
கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்:
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்! 'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய்' என்றார்கள் போகா முன்பே, செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்!
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலமெலாம் வாய்ந்த தங்கே!
Ο Ο Ο 1937