பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T4 பாரதிதாசன்

மண்ணாங்கட்டி:

அத்தனையும் சரி. அத்தனையும் சரி. எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?

புரோகிதன் :

இந்தவைகாசி எட்டுத் தேதிக்கு முந்தியே திருமணம் முடிந்திடவேண்டும்.

மண்ணாங்கட்டி :

அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?

புரோகிதன் :

நடுவில் ஒரேஒரு தடையிருப்பதால் - ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.

வெள்ளையப்பன் :

அப்படிச்சொல்லுக அதுதான்ே சரி.

மண்ணாங்கட்டி :

மணப்பெண் என்ன பணக்காரி தான்ா?

புரோகிதன் :

மணப்பெண் கொழுத்த பணக்காரன்மகள். பெற்றவர்கட்கும் உற்றபெண் ஒருத்திதான்். மண முடிந்தபின் மறுமாதத்தில் ஈன்றவர் இருவரும் இறந்துபோவார்கள். பெண்ணின் சொத்து பிள்ளைக்கு வந்திடும்.