பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாரதிதாசன்

மண்ணாங்கட்டி :

இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர். என்ன என்றால்-வேறொன்று மில்லை. எனக்குக் குழந்தை இன்னம் பிறக்குமா?

வெள்ளையப்பன் :

உக்கும் இனிமேல் உனக்கா பிள்ளை?

புரோகிதன் :

இனிமேல் பிள்ளை இல்லை இல்லை.

மண்ணாங்கட்டி :

இந்தா நாலணா எழுந்துபோம் ஐயரே!

புரோகிதன் :

ஆயினும் இந்த ஆவணிக்குப் பின் பெண்குழந்தை பிறக்கும் உறுதி; போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்.

மண்ணாங்கட்டி :

சரி,இந் தாரும் ஒருரூபாய்தான்்!