பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 91

அந்த இடத்தை அடைந்த தென்ன? மண்ணாங்கட்டி :

என்ன இழவோ யார்கண்டார்கள்? (தமிழ்ப் புலவர் அமுதனார் வந்து இரிசனிடத்திலும், மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.)

அமுதனார் :

உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்? மண்ணாங்கட்டி :

ஆம்ஆம் ஐயா! அன்னவன் எங்கே? அமுதனார்:

யானதைச் சொல்லவே இங்கு வந்தேன். இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத் தீய இந்தியைத் திணிக்கின்றார்கள். தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார். நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ? போருக்குத் திராவிடர் புறப்பட்டார்கள். திராவிடர் கழகம் சேர்ந்துதான்் உங்கள் நல்ல முத்தும் நல்லதுதான்ே! இரிசப்பன் :

எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்? மண்ணாங்கட்டி :

திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை அமைத் திருந்தார் அவனின் தந்தையார்!