பக்கம்:பாரதித் தமிழ்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த் திரட்டு 355

துக்கு ஸ்வாதீனம் கொடுத்த பிறகும்கூடப் பழைய புண்களை மறந்து ஐர்லாந்து இங்கிலாந்திடம் நட்புச் செலுத்துமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் நம்ப வில்லை. அவரால் நம்ப முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறு குறு குறு குறு என்னுமாம். அவருடைய இனத்தார் பண்ணிய பிழைகளெல்லாம் அவருக்குத் தெரியாதா? எனினும், ஆங்கிலேயர் தம்மைப் போலே பிறரையும் நினைத்து ஸித்தாந்தங்கள் ஏற் படுத்துவது தவறென்றும் ஐரிஷ் ஜாதியாருடைய சரித்திரத்தை நோக்குமிடத்தே, அவர்கள். நெடுங் காலமாகக் கஷ்டப்பட்டுப் பரிசுத்தமடைந்த கூட்டத் தாராதலால், அவர்களுடைய மனம் கல்மனதாக இராமல் நன்றாகக் குழைந்து, பக்குவப்பட்டு, தெய்வ பக்திக்கு வசப்படுவதாகச் சமைந்திருத்தல் விளங்கு கிறதென்றும். ஆதலால், ஐர்லாந்து தனக்கு ஸ்வா தீனம் கிடைத்தால், விரைவிலே இங்கிலாந்தின் பழைய பிழைகளை மறந்து, இங்கிலாந்துடன் உண்மையான நட்புப் பாராட்டியே வருமென்றும் நான் நினைக்கிறேன். ஐர்லாந்துக்கு ஸ்வாதீனம் கொடுத்தால், அந்நாட்டிற்கும், இங்கிலாந்துக்கும் கேடு சூழும் பிற நாடுகளுக்கும் அஃதோர் தூண்டுத லாகுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லு கிறார், ஐரிஷ் துறைமுகங்களின் பரிபாலனம் இங்கி லாந்தின் கையினின்றும் நழுவுமாயின், அதனல் இங்கிலாந்தின் ராணுவ சக்திக்கு பங்கம் நேரு மென்றார். அங்ஙனம் நேரும்படி செய்யக்கூடிய எந்த ஏற்பாட்டையும் இங்கிலாந்து அங்கீகரிக்க முடியா தென்கிரு.ர்.

மற்றக் குடியரசு நாடுகளுக்குள்ள ஸ்தாபனம் ஐர்லாந்துக்குக் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் ஆஸ்க்வித் வாயினல் சொல்லிய போதிலும், அவ ருடைய உட்கருத்து அப்படியில்லை யென்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/354&oldid=605739" இலிருந்து மீள்விக்கப்பட்டது