பக்கம்:பாரதித் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

75


பாடல்கள் அடங்கிய ஸ்வதேச கீதங்தள் வரப்பெற்றாேம் என்று தம்மை அந்நியர் போலக் கொண்டு அதற்கு ஒரு மதிப்புரையும் வரைந்தார்.

“பாரதியின் இந்தியா பத்திரிகை சட்ட வரம்பை மீறி நெருப்பு மழை பொழியத் தொடங்கிற்று. இது பாரதியாரைப் பிடித்த கெட்ட காலம்தான். இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீசார் இந்தியா பத்திரிகையின் காரியாலயத்துள் பிரவேசித்து பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர். தாம் ஆசிரியரல்லவென்றும், தமது பெயர் வாரண்டில் இல்லையென்றும் கூறிக்கொண்டிருக்கையில் இந்தியா பத்திரிகையை வெளியிடுபவரான ஸ்ரீநிவாசன் என்பவர் அங்குற்று, “என்ன” என்றார். போலீசார் அவரே ஆசிரியராகப் பதிவு செய்யப் பெற்றவரென்று அறிந்து அவரைக் கைது செய்தனர். விசாரணைக் காலத்தில் ஸ்ரீநிவாசன் தாம் ஆசிரியரல்லவென்றும், பாரதியாரே உண்மை ஆசிரியரென்றும், தாம் ஒரு குமாஸ்தா போலவே இருந்து வந்ததாயும் தமக்கு வியாசம் எழுதச் சக்திகூடக் கிடையாதென்றும் தெரிவித்துக் கொண்டார். ஆயினும் அவருக்கு ஐந்து வருஷ கடின காவல் விதிக்கப்பஃடது. பாரதியாருக்கும் வாரண்டு பிறந்தது. அதற்குத் தப்பிப் பாரதியார் புதுச்சேரி போய்ச் சேர்ந்தார்.

“இது சம்பந்தமாகச் சுதேசமித்திரன் 16-11-1908-ல் துணையங்கத்தில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.'சென்னையிற் பிரசுரமாய் வந்த இந்தியா என்ற வாராந்தரத் தமிழ்ப் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத்துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன் பேரில் ராஜத் துவேஷக் குற்றஞ் சாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/75&oldid=1539787" இலிருந்து மீள்விக்கப்பட்டது