பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கொள்கையும் செய்கையும் 120

ஜாதியருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நாம் முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லட்சம் கூட இல்லை. உலகத்தோர் எல்லோரும் இதை எங்கும் எக்காலத்திலுமில்லாத அற்புதம் என்று நினைக்கிறார்கள். இதனால் உலகத்தில் உள்ள மற்ற ஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லட்சம்) ஜனங்களையும் அடக்கியாளும் ஆங்கிலேயர்களை மகாவீர சூரர்கள் என்றும் ஒப்பற்ற பலிஷ்டர்கள் என்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் அதற்கு பதிலாய் நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக்கு அவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டு விடுகின்றன. இந்தியன் எங்கே போனாலும் நிந்திக்கப்படுகிறான். யாரும் நம் மீது காறித் துப்புகிறார்கள். உலகத்தோர் இந்த இந்தியர் என்ற ஆடுகளை, ஆங்கிலேயர் மட்டுமல்ல வேறே எந்த ஜாதியாரும் இலேசாக ஆளலாம் என்று நம்பியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் மிகுந்த அந்தஸ்துகளைப் பாராட்டினால் அது ஒவ்வா. ஒழுக்கம். நாம் சுயாதீனம் அடைந்த பிறகு மீசை முறுக்கலாம். இப்பொழுது வீண் டம்பங்கள் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள்.

நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரியும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றே தான் உண்டு. அதாவது நம்முடைய அருமை நாட்டில் சுயாதீனத்தை நாட்டி, பிறர் அஞ்சி மதிக்கும் படியாக நாம் ஜீவிக்க வேண்டியது. இந்தக் கொள்கைப் படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் அவற்றை நாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்தக் கொள்கையைக் கடைப் பிடித்து நடப்பதில் எவ்விதமான சுகத்தையும் மரியாதையையும் அந்தஸ்தையும் இச்சிக்கப் படாது. வீடு வாச்ல் மனைவி மக்கள் எல்லோரையும்

இழக்கும் படி நேர்ந்தாலும் இழந்தே தீர வேண்டும்.

“மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார் - செவ்வி