பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. வாசக ஞானம் வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜனசமூகத் திருத்தம் முதலிய லெளகிய விவகாரங்கள் எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங் களையும் உணர்ந்து முடித்துவிட்டனர். ஒரு துறை அல்லது ஒர் இலாகாவைப் பற்றிய ஸடுகள்:ம தந்திரங்கள் மற்முெரு துறையில் பயிற்சி கொண்டோர் அறிந்திருக்கலாம். ஆனல் அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான் களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்ருகத் தெரியும். பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹாஸல்கூடிமமான பரம சத்தியங் களையெல்லாம் கண்டுபிடித்து முடித்து விட்டனர். ஆனல் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமை யற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது. எனவே அறிவினல் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத் திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக் கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்கு மிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர். "வாசக ஞானத்தினுல் வருமோ ஸுகம் பாழ்த்த பூசலென்று போமோ புகலாய் பராபரமே' என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிரு.ர். இதன் பொருள் 'வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக் கும் ஞானத்தினல் ஆனந்தமெய்த முடியவில்லையே? என் செய்வோம்? பாழ்பட்ட மனம்ஒயாமல் பூசலிட்டுக் கொண் டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ £_lo 2-...-7