பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நமது தேசம் அபூர்வமான ஞானத்திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதுாக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து பூரீமான் க்ளெமான்ஸோ முதலிய வர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமா கிறது. எனினும் நாம் உலகத்திற்குப் புது வழி காட்டத் தகுதியுடையோமென்பதை ருஜூப்படுத்தி யிருக்கிருேமே யன்றி இன்னும் அந்த ஸ்தானத்தில் நாம் உறுதிபெற வில்லை. 'மேற்குத் திசையிலிருப்பதுபோலவே இங்கும் மனிதர், பரஸ்பரம் அன்பு செலுத்தும்படி விதித்த கடவுளின் கட்டளையை மறந்து, ஒருவருக்கொருவர் விரோதிப்பதையும் கொலை புரிவதையும் கண்டு நான் வ்யஸனப் படுகிறேன்' என்று பூரீ க்ளெமான்ஸோவே சொல்லியிருக்கிருர். ஆனால் இந்த ஸமயத்தில் இந்தி யாவில் பரவிவரும் ஸாத்விக தர்மக் காற்றை சுவாஸியாம விருப்பாராளுல், பூரீ க்ளெமான்ஸோவின் வாக்கில் இந்த வார்த்தை உதித்தே யிராதென்று நான் நிச்சயமாகக் கூறுவேன். இப்போது பூரீ க் .ெ ள மான் ேஸ்ா பாரீஸ் நகரத்திலிருந்தால் அங்கு மறுபடி வீசி வரும் ஜெர்மானிய விரோதக் காற்று இவரையும் தாக்கி, இவருடைய புத்தி ஸ்ாத்விக நெறிகளிலே செல்ல இடங் கொடுத்திராது. எனவே, இந்தியா அன்பு நெறியால் வலிமை யோங்கி உலகை நடத்த வேண்டுமென்ற கொள்கையை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆசாரத்தின் ஆரம்பக் கலைகளே மிகவும் ஆச்சர்யமாக, உலகத்தாரெல்லாருங் கண்டு வியக்கும்படி யிருக்கின்றன. இனி இக் கொள்கை இந்தியாவில் மக்களுக்குள்ளே எல்லா வாழ்க்கைத் துறை களிலும் பூர் ண மா. க ஸ்தாபிக்கப்பட்டு விளங்கும் காலத்தைக் கடவுள் விரைவிலே அருள் செய்வாராகுக. - காலவிளக்கு என்ற கட்டுரைப் பகுதி-பாரதி தமிழ்