பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 மாருத விதிகள். இக்காலத்து இயற்கை விதிகளை ஒன்ருென்ருக ஆராய்ந்து கண்டுபிடித்துப் பின் அவற்றை அனுசரித்து வாழவேண்டும். இந்த விதிகளிலே மனித ஜாதியார் இன்றுவரை 'கற்றது கைமண்ணளவு, கல்லாத துலகளவு. இவற்றின் ஞானம் வளர வளர மனித ஜாதி மேன்மை பெறும். சாஸ்திர விதி சாஸ்திரம் மனிதனல் எழுதப்பட்டது. ஆதலால் இன்னும் நிறைவு பெறவில்லை. தெய்வ விதிகளைக் கூடிய வரை பின்பற்றியே சாஸ்திரக்காரர் எழுத முயற்சி செய் திருக்கிருர்கள். ஆனல் காலதேச வர்த்தமானங்கள் மாறுபடுகின்றன. தெய்வ விதிகளைப் பற்றிய புதிய வித்தைகள் வழக்கப்படுகின்றன. அப்போது சாஸ்திர விதிகளை மாற்றுதல் அவசியமாகிறது. திருஷ்டாந்தமாக வைத்திய சாஸ்திரத்தைப் பாருங்கள். காலதேச வர்த்த மானங்களுக்குத் தக்கபடி விதிகள் மாறுகின்றன. பூர்வீக ஐரோப்பிய வைத்தியர்கள் பெரும்பான்மை எல்லா வியாதி களுக்கும் நோயாளியின் உடம்பைக் குத்தி ரத்தத்தைக் கொஞ்சம் வெளியேற்றினல், அதுவே நல்ல முறையென்று நினைத்திருந்தார்கள். தலை நோவு, ஜ்வரம் எது வந்தாலும் உடம்பைக் குத்தி ரத்தத்தைக் கொட்டித் தீரவேண்டும். இந்த மடமையாலே, பலர் ரத்த நஷ்டமே முதற் காரண மாய் அநியாயமாக மடிந்து போனர்கள். இக்காலத்தில் அந்தக் கொள்கை மாறிவிட்டது. ஜ்வரம் வந்தால் பத்தியம் மதுரையில் ஒரு மாதிரி, வேலூரிலே மற்ருெரு மாதிரி. இலக்கணத்தை எடுங்கள் : 'பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவலகால வகையினனே' என்று பவனந்தி முனிவரே சொல்லுகிரு.ர்.