பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 பாவேந்தர்-ஒருநினைவுச்சம் பழனியம்மா என்று மனைவியாரை அழைத்து அவற்றை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். விரைவில் அம்மையார் பழச் சுளைகளையும் கீற்றுகளையும் தட்டுக்களில் கொண்டு வந்து வைத்தார். நம்ம சாயல்... கவியிலே இருக்கு... இன்னும் நீட்டா (நீளமாக) எழுதணும் என்றார் பாவேந்தர். பிறகு ஒரு தாளை எடுத்து, என் கையெழுத்து சரியா இருக்காது... இதை நீயே பிரதி செய்..' என்று அணிந்துரைக் கவிதையைக் கொடுத்தார். கவிதையை நான் பிரதியெடுத்தேன். கவிதை இது: அண்ணா மலைப்பல் கலைக்கழகப் பேராசான் அண்ணா மலையென் அரியதமிழ் மாணவனின் கண்ணான மாணவன்நான் என்று கழறித்தம் கையெழுத் துப்படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்நான் அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான்செய்தேன் கண்செலுத்த வேண்டுமென்றார். மாட்டேனென்றா சொல்வேன் கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான் கண்டேன் பாட்டுத் திறம்கண்டேன் பாலசுப் பிரமணியம் பாவாணர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில் நாட்டுத் திறம்என்னே நாற்கவியும் முத்தமிழும் நல்கும் பயன்என்னே நாவுறிப் போனேன்நான் வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல் பாட்டை திறக்கவந்த பாலசுப் பிரமணியம் பைந்தமிழ்ப் பாவாணர் புகழ்பெற்று வாழியவே! இந்தக் கவிதை என்னைப் பூரிப்பிலே ஆழ்த்தியது. பிரதியெடுத்துக் கையொப்பமிடப் பாவேந்தரிடம் கொடுத்ததும், நான் என்ன எழுதியிருக்கிறேன்; நீ எப்படி எழுதியிருக்கிறாய்? என்று கேட்டார் கடைசி வரியில் நான் பாட்டைத் திறக்க என்று ஒற்றுப் போட்டு எழுதியிருந்தேன். ஒற்றை அடித்துத் திருத்தி, பாதை திறக்க என்ற பொருளில் தான் பாட்டை திறக்கண்ணு போட்டிருக்கேன் என்று சொல்லிக் கையொப்பமிட்டார். பாவேந்தர் இப்படிப் பாராட்டியதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. பணிந்து வணங்கி விடைபெற்றோம். அப்போது பாவேந்தர், இப்ப நான் மத்திய அரசு எடுக்கும் பாரதி வரலாற்றுப் படத்துக்கு உரையாடல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். அது ஏன் பயன்படுத்தப்படாமல் போயிற்று எனத் தெரியவில்லை. அதே சமயம் நிலவுப்பூ அச்சுப்பகுதிகளையும், ஒவியங்களையும்