பக்கம்:பிராயச்சித்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 லா. ச. ராமாமிருதம் உடனே தர்மராஜனுக்கு நினைவு வந்துவிட்டது. மண்டையுள் நியோனில் வார்த்தைச்சரடு வேகமாய் ஊர்ந்தது. கல் சிரிக்கிறது. கல் சிரிப்பதை தெய்வம் சிரிப்பதாக எண்ணிக்கொண்டு அந்தச் சிரிப்புக்கு நமக்கு இஷ்டமான அர்த்தத்தை வர வழைத்துக் கொண்டு, தெய்வம் கொடுத்த உத்தரவாக எடுத்துக்கொண்டு காரியத்தில் இறங்குகிறோம். காரியம் முடிந்தபின் கல் தெய்வமாக மாறி, அப்போ தெய்வம் சிரிக்கிறது. தர்மராஜனுக்குப் புல்லரித்தது. ஆனால் அவர் புன்னகையில் ஏளனம் சிந்திற்று. "அதை இப்போ உங்களுக்குத் திருப்பிச் சொல்லனும் என்கிறீர்களா? இத்தனை நாள் கழித்து ஞாபகம் இருக்குமா? இருக்கணுமா?" இன்ஸ்பெக்டர் இரு கைகளையும் விரித்தார். உதட்டைப் பிதுக்கினார். "நான் சொல்லமாட்டேன் என்கிறேன்.' “That is alright.” "மிஸ்டர் இன்ஸ்பெக்டர், உங்களுயை Academic discussion sráðsortih srsť šGğ Gga maiustsusma. Discussion ஆ பண் lங்க நண்டு பிடிக்கறிங்க." “Sorry Sir.’’ 'இப்போ நான் ஒரு Discussion. ஆனால் ரொம்பச் சின்னது மிஸ்டர் கமலநாதன். நீங்கள் அடிப்படியிலிருந்து படிப்படியா கான்ஸ்டேபிள், H. C. Sub இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் அப்படியா அல்லது-? இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்-இல்லை Directly recruited as S. i. 55thuan of Retire -opioić, in D. i. G.”