பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 5

யையும் சுட்டிக் காட்டும் கதைகள். மனிதரின் உயர்பண்பு களைக் கூறும் கதைகளைப் போலவே, அவர்களது பண்பாட்டுச் சிதைவுகளையும் சிறுமைக் குணங்களையும் எடுத்துக்காட்டும் கதைகளையும் எழுதியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட பலவிதமான கதைகளையும் இந்தத் தொகுப்பில் காணலாம். இவை வாழ்க்கை மற்றும் மனிதர்கள் பற்றிய யதார்த்த சித்திரிப்புகள்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள், இதுவரை வெளிவந்திருக்கிற எனது ஏனைய சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றிராத கதைகள் ஆகும். இவற்றை நன்கு தொகுத்து, அழகான முறையில் புத்தகமாகப் பிரசுரித்துள்ள பத்மா பதிப்பகத்துக்கும், என் இனிய நண்பர் ஜி. நடராஜன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.

- வல்லிக் கண்ணன்