பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19-புதிய தெய்வம் . . . . . . நாக்குழறக் கத்தி நாலா புறமும் தீக்குத் தப்பிச் சிதறி ஓடினர்! தீயை மூட்டியத் த'யோர் கும்பல் தாயை மகளைப் பேத மின்றி விரட்டிப் பிடித்தது வெறியுடன் கவ்விப் புரட்டி எடுத்துப் பொல்லாங்கு செய்தது! கார்களை நொறுக்கினர் கற்களை வீசினர்! பேர்களைச் சொல்லிப் பிரமுகர்களைக் குத்தினர்! சாத்திர தர்ம தேச விரோதிகளால் ஆத்மிக சமாஜம் அக்னிப் பசிக்கே ஆகாரம் ஆக ஆரம் பித்தது! வேகாத இரும்பு விட்டங்கள் கூட