இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- - - - - - - - - - - - ஆதா சண்முகம் -- 44 கைப்பற்றவேதான் வந்து விட்டனர்! கயவரிடம் சிக்கினால் கட்டாயம் எனது உயிரும் மானமும் உடமையும் இழப்பேன்! இதைக்கொடுத் தாவது ஏதாவது செய்யுங்கள் வதைசெய்ய விடாதீர்!" என்றே அழுது வைர அட்டிகையைக் கழற்றிக் கொடுத்து "ஐயா போங்கள் தாமதம் வேண்டாம்” என்றே இளைஞனை வேண்டிக் குழைந்தாள் குன்றும் குனிந்தே குரலிட் டழுததுபோல்! மதிலுக்கு வெளியே இருந்த அவர்கள் கதவை இடித்தனர்! கத்தினர்; கூவினர்! இளைஞன் மெதுவாய் அட்டிகை அதனை கதவிடுக்கு வழியே