8 புதிய பார்வை
தக்க சில கிலேமைகள் இங்த இலக்கியப் பத்திரிகைகளால் தான் தமிழில் அறிமுகமாயின. இந்தக் காலகட்டத்தில் மேலே நாட்டின் இலக்கியத்துறைகளோடு தமிழ் எழுத் தாளர்களுக்கு ஏற்பட்ட பரிச்சயமும் இதற்கு ஒரு காரணம்.
இந்தப் பத்திரிகைகள் வகுத்த வழியில் பின்னல் இலக்கிய அம்சங்களோடு கவர்ச்சிகரமான பொதுமக்கள் suffsåsås usih (Features of Mass scale journalism) says; go தமிழில் சில பத்திரிகைகள் வங்தன. அவையே ஹனுமான் இந்துஸ்தான், அணிகலம் போன்றவை. இதே கால கட்டத்தில்தான் ரங்கூனிலிருந்து வெ. சாமிநாத சர்மாவின் ஜோதி"யும் வெளிவந்தது. பின்னாளில் வெளிவங்த கிராம ஊழியன், கலா மோகினி. காலச்சக்கரம், காதம்பரி, தேனி, குருவளி போன்ற பத்திரிகைகளுக்கு எல்லாம்கூட மணிக்கொடி, கலைமகள் சக்தி, ஆகியவைதான்துரண்டுதலாக அமைந்தன. இலக்கியப் பத்திரிகை என்ற பெயரின் பொருள் முழுமை அடையத் தொடங்கிய சமயம் இதுதான் என்று கூறவேண்டும். 'மணிக்கொடி கடந்து நின்று விட்டாலும் தமிழில் இலக்கியப் பத்திரிகைகளின் வர லாற்றை எழுத அதுதான் மைல் கல்லாக இன்னும் இருக் கிறது. மணிக்கொடியும், கலைமகளும், ஒரு கால எல்லேயில் தமிழ் இலக்கியத்தின் புதிய கிளைகளில் பல சோதனைகளும், சாதனைகளும் செய்து பார்த்த ஏடுகள். அங்தச் சோதனை களும் சாதனைகளுமே பிற்காலத்தில் பல இலக்கியப் பத்தி ரிகைகளுக்கு முன் மாதிரியாக அமைந்தன. பத்திரிகைத் தொழிலின் இலக்கிய ரீதியான வளம் இந்த இரண்டு பத்திரிகைகளாலும் ஒரு காலத்தில் துல்லியமாகவும், துலாம் பரமாகவும் நிரூபிக்கப்பட்டன. r
தமிழில் உ ைர ைட வளர்ச்சியின் திருப்பு முனைக்காலமாக இந்தப் பத்திரிகைகளின் காலம்