பேழையும் . 31
'துணைவனார்க்கு உற்ற துன்பம் . . " சொல்லிய தொடங்கி னானே' என்றார். புறாவின் துன்பத்தை நீக்கிய மாமன்னன் சிபியின் செய்தியை,
புறவின் அல்லல் சொல்லிய" . .
- -என்றார் ஆவூர் மூலங்கிழார்.
'பண்டைச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய"
-என்பது அவ்வைப் பெருமாட்டியின் தொடர்
களைகட்டளைச் சொல்லொடு இயைத்து முனைப்பாடியார் பேசுகின்றார். அறத்தைப் பயிராக உருவகிக்கும் அவர், இனிய சொல்லை விளைநிலமாக்கி, வன்சொல்லைக் களையாக்கி, உண்மைச் சொல்லை எரு ஆக்குகின்றார்.
'இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி”*
என்பது அவர்தம் பாட் டு
சொல் நிழலும், நெல் நிழலும்
நெற்கதிர் பல்லுயிர்களையும் உணவு தந்து ஒம்பிப் பசி என்னும் வெம்மை போக்கிப் பேணிச் சுவை என்னும் நிழல் தருவதால் நெற்கதிரை "அலகு உடை நீழல்' என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.
. . இதுபோன்றே, மக்களை ஒலி இனிமையால் ஒம்பிப் பேணிச் சோர்வு என்னும் வெம்மை போக்கி இனிமை என்னும் நிழல் தருவது சொல். இச் சொல்லின் பயனைக்கொண்டு சொல் நிழல்' என்றனர் கோவூர்கிழார், - -
சீவ, சி : 1148
புறத் : 89 : 1.
புறம் : 90 : 7 -
அறநெறி :16, -
"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ் காண்ப
அலகுடை நீழ லவர் - குறள் :1084,