பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பூர்ணசந்திரோதயம் - 5 சொத்துக்களின் மேல் ஆசைப்படவே இல்லை. உங்களுடைய சொத்துகளெல்லாம் இப்போது உங்கள் பேரிலேயே இருக்கட்டும். அதைப் பற்றி பின்னால் யோசித்துக் கொள்ளலாம்’ என்றாள்.

உடனேஹேமாபாயி, “அம்மா ஷண்முகவடிவு நீ இனி உன் அக்காளைப் பற்றிய கவலையே கொள்ள வேண்டாம். அவள் இருக்குமிடத்தை நான்கண்டுபிடித்துவிட்டதாகவே நீ எண்ணிக் கொள்ளலாம். இன்னும் நாலைந்து தினங்களுக்குள், அவளைநீ பார்க்கும்படி நான் செய்கிறேன். அப்படி செய்ய ஒருவேளை என்னால் ஆகாமல் போகுமானால், அதன்பிறகு வேண்டு மானால், நாம் அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர் மூலமாக ஏற்பாடு செய்துகொள்வோம்’ என்றாள்.

அவள் கூறிய உறுதிமொழியைக் கேட்ட ஷண்முகவடிவு மிகுந்த உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தவளாய், எப்படியும் வெகு சிக்கிரத்தில் தான் தனது அக்காளைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கொள்ளலானாள். .

அவர்கள் இருவருக்கும் நேர்ந்த அன்றைய சம்பாஷணை அவ்வளவோடு முடிந்தது. அன்று முதல் ஹேமாபாயி கலமத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்குப் போவதாகச் சொல்லிவிட்டு அடிக்கடி வீட்டைவிட்டு எங்கேயோ போய் வந்து கொண்டிருந்தாள். ஷண்முகவடிவின் பலஹீனத்தைப் போக்குவதற்காக அவளுக்கு உயர்வான தாது புஷ்டி மருந்து களும் கொழுமையான ஆகாராதிகளும் கொடுக்கப்பட்டு வந்தன. அதனால் அவளது உடம்பு மூன்று நான்கு தினங்களில் பழைய அழகையும் தளதளப்பையும் அடைந்துவிட்டது. அவர் சேலை கட்டியிருந்த இடத்தில் இரண்டோர் இடங்களில் மாத்திரம் நெருப்புச் சுட்ட தழும்புகள் ஏற்பட்டிருந்தனவே அன்றி, முகம் முதலிய முக்கியமான இடங்களில் எவ்விதமான தழும்பும் ஏற்படவில்லை. ஆதலால், அவளது வசீகரமான தோற்றத்திற்குச் சிறிதும் களங்கம் ஏற்படவில்லை.