பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 அம்மா!’ என்று கூப்பிட்டுக்கொண்டே அதை இரண்டு மூன்று தடவை மெதுவாகத் தட்ட, ‘யார் அங்கே?’ என்ற குரல் உண்டாயிற்று. அடுத்த rணத்தில் கதவும் திறக்கப்பட்டது. உட்புறத்தில் அம்மணிபாயி நின்று கொண்டிருந்தாள். அவள் கருப்பாயி வருவாளென்று கனவிலும் நினைக்காதவள். ஆதலால், வேறே யாரோ கூப்பிடுவதாக எண்ணிக் கதவைத் திறந்துவிட்டாள். திறந்தவுடன் கருப்பாயி நின்றதைக் கண்டவுடனே அம்மணிபாயி திடுக்கிட்டு மிகுந்த வியப்படைந்தவள். ஆனாள். அவளது முகம் சடேரென்று மாறு பட்டது. கருப்பாயி இன்னொரு மனிதரோடு வந்திருப்பதை ஒரு rண நேரத்தில் அறிந்துகொண்ட அம்மணிபாயி, அவர்கள் ஷண்முகவடிவைப் பற்றி விசாரிக்கவே வந்திருக்க வேண்டு மென்று ஒரு நொடியில் யூகித்துக்கொண்டு சிறிதும் முகமறி யாதவள் போல நிற்க, அவளைக் கண்ட கருப்பாயி திடீரென்று உற்சாகமும் மகிழ்ச்சியும் தோற்றுவித்தவளாய் நீலமேகம் பிள்ளையை நோக்கி, ‘பார்த்தீர்களா? நான் சொன்னதுதான் நிஜம். இதோ இந்த அம்மாள்தான் எங்களைக் கோலாப் பூரிலிருந்து அழைத்து வந்தவர்கள். ஷண்முகவடிவம்மாளை இவர்கள்தான் சோமசுந்தரம்பிள்ளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அதன்பிறகு ஐந்தாறு நாள்கள் வரையில் இவர்கள் எவ்வளவோ உபசரணைகள் செய்து என்னை ஊருக்கு

அனுப்பி வைத்தார்கள்?’ என்றாள்.

அதைக் கேட்ட அம்மணிபாயி ஒன்றையும் அறியாத வள் போல மிகுந்த பிரமிப்பும் குழப்பமும் அடைந்து நிதானமாகப் பேசத் தொடங்கி, “யாரம்மாநீ நீ இப்போது சொன்னசங்கதியில் எதுவும் எனக்கு விளங்கவில்லையே? நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்பதும் தெரியவில்லையே. எத்தனாவது இலக்கமுள்ள வீட்டில், நீங்கள் காண வந்திருக்கும் மனிதர் இருக்கிறார்கள்?’ என்றாள்.