பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 இருந்து கொண்டுதான் இருக்கிறது. மறுபடியும் ஒரு தடவை. வந்து நான் உங்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் பல தடவைகளில் எனக்கு உண்டாயிற்று. ஆனால், ஒரு பிரமாதமான வழக்கில் முக்கியமான சில குற்றவாளிகளைக் கண்டுபிடிப்ப தற்காக நான் இரவு பகல் ஓய்வின்றி அலைந்து கொண்டி ருக்கிறேன். வேளா வேளைக்கு நான் போஜனம் சாப்பிடு வதற்குக் கூட எனக்கு அவகாசம் கிடைப்பது அருமையாய்ப் போய்விட்டது. இந்த வழக்கு ஒருவிதமாக முடிந்தவுடன் வந்து உங்களைப் பார்க்கவேண்டுமென்று நினைக்கிறேன். இதற்குள் நீங்களே வந்து, நான் எதிர்பார்த்த சந்தோஷத்தை உண்டாக்கி விட்டீர்கள்’ என்று புன்னகை தவழ்ந்த முகத்தோடு கூறினார். அவர் தமக்குக் காட்டிய அந்தரங்க அன்பையும், மரியாதையையும் உணர்ந்து பெரிதும் மகிழ்ச்சியடைந்த நீலமேகம் பிள்ளை, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உங்களுக்கு அவகாசக் குறைவு ஏற்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் வராமல் இன்னம் சொற்ப காலம் கழித்து வந்திருக்கலாம் என்ற எண்ணம் உண்டாகிறது. ஏற்கெனவே உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசந்தர்ப்பத்தை நான் வந்து இன்னமும் அதிகப்படுத்துகிறேன் போலிருக்கிறது; அதோடு கூட நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள வந்திருக்கும் தகவல்களை நீங்கள் தெரிந்துகொண்டால், உங்களுடைய கவலைகளும், கலவரமும் அதிகரிக்குமென்று நினைக்கிறேன். ஆகையால், இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை வருத்தாமல் உத்தரவு பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய், சில தினங்களுக்குப் பிறகு வரலாம் என்று நினைக்கிறேன்’ என்று மனப்பூர்வமான அன்போடு கூறினார்.

அதைக் கேட்ட இன்ஸ் பெக்டர் முன்னிலும் அதிகரித்த அன்பும் மகிழ்ச்சியும் தோற்றுவித்து, ‘இல்லை இல்லை. இப்போது எனக்கு அவ்வளவு அதிக தொந்தரவு இல்லை.