பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 191 அருமையான காரியங்களையும் சாதித்துவிடலாம். இனி இது என்னைச்சேர்ந்த பொறுப்பு. இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தக்ஷணம் முதல் நான் என் முழு கவனத்தையும் இந்த விஷயத்திலேயே செலுத்தி என்னாலானவரையில் முயற்சி செய்து பார்த்துவிடுகிறேன். அந்தப் பெண் என்னுடைய சொந்தத் தங்கையென்றே நான் மதிக்கிறேன் என்பதை நீங்கள் உறுதியாக எண்ணிக்கொள்ளலாம். முதலில் நாம் ஷண்முக வடிவைக் கண்டுபிடித்துக்கொண்டு பிறகு கமலத்தைத் தேடலாம். அவள் ஊருக்குக் கடிதங்கள் எழுதியதிலிருந்து, அவள் உயிரோடு rேமமாக இருப்பதாகவும், அவளை வஞ்சித்தோருடைய கருத்துக்கு இசைந்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பதாகவும் நாம் யூகிக்கவேண்டியிருக்கிறது. அந்தப் பெண்ணின் கற்பு இதுவரையில் சுத்தமாக இருக்குமோ என்னவோ? அதுதான் கவலைக்கு இடம் கொடுக்கிறது. ஷண்முக வடிவின் பரிசுத்தத்தைப் பற்றி நீங்கள் கனவிலும் சந்தேகிக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த இருபத்தைந்து தினங்களில் அவளுக்கு எப்படிப்பட்ட அபாயம் நேரிட்டதோ என்பதுதான் பெருத்த கவலையாக இருக்கிறது’ என்றார்.

நீலமேகம் பிள்ளை மிகுந்த கவலையும், கலக்கமும், குழப்பமும் தோற்றுவித்தவராய், “ஆகா! இந்த ஊர் கெட்ட கேட்டைப் பார்த்தீர்களா? அதுவும் முக்கியமாகப் பெரிய மனிதர்களென்று பெயர் வைத்துக்கொண்டிருப்போர் எப்படிப்பட்ட காரியங்கள் செய்கிறார்கள் பார்த்தீர்களா? அந்த மருங்காபுரிக் கிழவருக்கு வயது எவ்வளவாயிற்று. அவர் இன்னமும் தெய்வம் ஒன்றிருக்கிறது என்பதையாவது, தாம் இனியாவது அடுத்த உலகக் காரியத்தைக் கவனிக்க வேண்டும் என்பதையாவது கொஞ்சமும் எண்ணாமல் எவ்விதமான அட்டுழியம் செய்கிறார் பார்த்தீர்களா?’ என்றார்.

இன்ஸ்பெக்டர் இனிமையாகப் புன்னகை செய்தவராய்,

“ஆம். அவரைப்பற்றி நாம் பேசுவதேன்? இதோ இந்த உயிலில்

பூ.ச.V-13 .