பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பூர்ணசந்திரோதயம் - 5 போய் விடுவார் போலிருக்கிறது. கடைசியாக ஒருதரம் அவர் தம்முடைய பிள்ளையைப் பார்க்க வேண்டுமாம்; என்னிடம் நிரம்பவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் என்றார்.

இளவரசர் திடுக்கிட்டு, ‘அப்படி இருக்கும் தருணத்தில் இருப்பது யார்? ஏன் தயங்குகிறீர்? தைரியமாகப் பேசும் என்றார்.

இன்ஸ்பெக்டர், ‘வேறொருவரும் இல்லை. நம்முடைய மருங்காபுரி ஜெமீந்தார்தான் அந்த நிலைமையில் இருக்கிறார். அவர் இறப்பதற்குமுன் தம்முடைய பிள்ளையை ஒருதரம் பார்க்க வேண்டுமாம்’ என்றார்.

இளவரசர் மிகுந்த ஆச்சரியமடைந்து, ‘என்ன வேடிக்கை இது! மருங்காபுரி ஜெமீந்தாருக்குப் பிள்ளை ஏது? நீர் யாருக்கு இந்தச்சமாசாரம் சொல்லப் போகிறீர்? ஒருவேளைரrாமிர்தம் ஜெமீந்தாருக்கும் அவருக்கும் நெருங்கிய பாந்தவ் வியம் ஏதாவது இருக்குமோ?’ என்றார்.

இன்ஸ் பெக்டர், ‘இல்லை. இல்லை. இன்னொரு மாப்பிள்ளை இருக்கிறாரே. அவர் மருங்காபுரி ஜெமீந்தா ருடைய தம்பியின் குமாரர். அந்த ஜெமீந்தார் தம்முடைய சகலமான சொத்துக்களையும் அபாரமான சமஸ்தானத்தையும் இவருக்கே எழுதி வைத்திருக்கிறார். கடைசியாக ஒருதரம் பார்த்து இந்த ஷண்முகவடிவு, கமலம் ஆகிய இருவர் விஷயத்திலும் அவர் செய்துள்ள சில தவறுகளை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் பிரியப்படுகிறார்” என்றார்.

அந்தச் செய்தியைக் கேட்ட இளவரசர், ஷண்முகவடிவு, நீலமேகம்பிள்ளை முதலிய எல்லோரும் பெரிதும் வியப்புற்று பிரமிப்படைந்து அப்படியே மலைத்துப் போயினர். கலியாணசுந்தரத்தின் உண்மை வரலாற்றை அறிந்தவளான கமலம் ஒருத்தியே அதைப் பற்றி ஆச்சரியமடையாமல், கலியாணசுந்தரத்திற்கு அதிசீக்கிரத்தில் ஏற்பட இருக்கும்