பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 என்னைப் போலீஸாரிடத்திலிருந்து விடுவிப்பதுபோலப் பாசாங்கு செய்து, வேறே எங்கேயாவது என்னைக் கொண்டு போய் வைத்துகொண்டு பலாத்காரம் செய்ய உத்தேசிக்கி றார்களோ என்று நான் சந்தேகித்தேன். நீங்கள் உண்மையி லேயே போலீஸ்காரரையும் காசாரிகளையும் அடித்து என்னைத் தப்பவைத்ததைக் கண்டபோதே, என் சந்தேகம் அநேகமாக விலகிவிட்டது. இப்போது நீங்கள் தஞ்சாவூரி லிருந்து வந்தீர்களென்பதைக் கேட்க என் சந்தேகம் முழுதும் விலகிவிட்டது. அந்தப் பெண்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பது தெரிகிறது. ஆனால் தஞ்சாவூரில் எனக்குத் தெரிந்தவர்களும் என் விஷயத்தில் இவ்வளவு தூரம் ஒத்தாசை செய்யக்கூடியவர்களும் யாரும் இல்லையே. என் விஷயத்தில் உண்மையான இரக்கமும், அனுதாபமும், விசனமும் கொண்டு, தன் உயிரையும் எனக்காகக் கொடுக்கக் கூடியவள் திருவாரூரில் இருக்கிறாள். அவளையும் இவர்கள் ஏமாற்றி வஞ்சித்து, அவள் என்மேல் கெட்ட அபிப் பிராயம் கொள்ளும் படி மித்திரபேதம் செய்திருக்கிறார்கள். அவள் என் விஷயத்தில் உதவி செய்ய உங்களை அனுப்பி இருப்பாளோவென்பதும், அவள் இப்போது கோலாப்பூரி லேயே இருக்கிறாளா, அல்லது திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இரண்டிலொன்றில் இருக்கிறாளாவென்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஆகையால், உங்களை யார் இவ்விடத்திற்கு அனுப்பியது என்பதையும், நான் இவ்விடத்தில் இப்படிப்பட்ட நிலைமையில் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதையும் நீர் எனக்கு முதலில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட பஞ்சண்ணா ராவ் கபடமாகப் புன்னகை செய்து, “ஐயா! நான் கூலிக்காரன். எனக்கு இந்த விஷயத்தில் அதிக விவரமெதுவும் தெரியாது. தஞ்சாவூரிலுள்ள ஒரு மனிதர் எங்களை இங்கே அனுப்பிவைத்தார். அவர் உம்முடைய