பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

டாண்டுப் பாவங்களிலிருந்து காக்கப்படுவர்” என்றார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள்.

“இம்மாதத்தின் முதல் நாள் இரவு முழுமையும் கண் விழித்து இறை வணக்கம் புரிவோரின் கடந்த ஆண்டுப் பாவங்கள் முழுமையாக மன்னிக்கப்படுகின்றன” என்பதும் நபிகள் நாயகம் (சல்) வாக்காகும்.

இவ்வாறு இறை வணக்கம் புரிவதற்கும் நோன்பு நோற்பதன் வாயிலாகப் பாவச் செயல்களிலிருந்து விடுபடு வதற்கும் ஏற்ற புனித மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று அடிப்படையிலும் சிறப்புமிக்க மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது. அதிலும் முஹர்ரம் பத்தாம் நாள் மிக முக்கியத்துவமுடைய, போற்றத்தக்க நாளாக அமைந்துள்ளது.

எகிப்திய கொடுங்கோலன் பிர்அவ்ன் பிற தெய்வங்களை வணங்காது தன்னையே இறைவனாக வணங்குமாறு மக்களைக் கட்டாயப்படுத்தினான். மறுத்தவர்களைக் கொன்று குவித்தான். தன்னை கடவுளாக வணங்க மறுத்ததோடு அனைத்தையும் படைத்துக் காக்கும் இறைவனாகிய அல்லாஹ்வே வணங்கத்தகுந்த ஏக இறைவன் எனக் கூறிய மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்களையும் அவரது கூட்டத்தாரையும் அழித்தொழிக்க பெரும் படையோடு விரட்டிச் சென்றான். மூஸாவுக்காக செங்கடல் பிளந்து நின்று வழி விட்டது. அவர்கள் கரையேறியதும் பிளந்து நின்ற செங்கடல் ஒன்றிணைந்தது. துரத்தி வந்த எதிரிகள் கடலில் மூழ்கி மாண்டனர். இந்நிகழ்ச்சி நடந்தது முஹர்ரம் பத்தாம் நாள். இதனையே இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் முஹர்ரம் மாத ஆஸூரா நோன்பாக நோற்கிறார்கள். ரமலானுக்கு அடுத்த முக்கியத்துவம் நிறைந்த புனித நோன்பு ஆஸூரா நோன்பாகும்.