பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

நபிகள் நாயகம் (சல்) வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் இறை தூதர்களாக மக்களுக்க நேர்வழி காட்ட இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப் பட்டு உள்ளார்கள்.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.” (குர்ஆன் 35 :24)

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு.” (குர்ஆன் 10:47)

இவ்விருதிருமறை வசனங்களிலிருந்து உலகெங்கும் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் இறை தூதர்கள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது. இவர்கள் மூலமே இறை வேதங்களும் அவ்வக் காலகட்டத்திற்கேற்ப இறக்கியருளப்பட்டுள்ளது என்பதும் திருமறை மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அவரவர் தாய்மொழியில்
இறை வேதம்

இவ்வேதங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டன என்பதை,

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்” (குர்ஆன் 14:4)

எனத் திருமறை மொழிகின்றது. இதிலிருந்து மண்ணுலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவரவர் மொழியிலேயே இறை வேதங்கள் இறைத்தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன; அவ்வகையில் இந்தியாவிலும் பலப்பல இறை