பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உலகின் முதல் பொது
அரசு அமைப்புச் சட்டம்

பல்வேறு சமய, இன மக்களின் தலைமையில் பொறுப்பேற்ற பெருமானார் கல்வி கற்காதவராக இருந்த போதிலும் மதினா நகர அரசுக்கு என பல்வேறு சமயத்தவர்க்கும் பொதுவான அரசு அமைப்பு சட்டம் (Constitution) ஒன்றை எழுத்துப்பூர்வமானதாக உருவாக்கினார்.

மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக எழுத்து வடிவில் உருவாக்கப்பட்ட முதல் அரசமைப்புச் சட்டம் (Constitution) இதுவேயாகும். அதுவரை மதினா மக்கள் எழுத்துருப் பெறாத சில பொது விதிமுறைகளை மட்டுமே அனுசரித்து வந்தனர்.

எழுத்துருவில் உருவாக்கப்பட்ட இச்சட்டம் ஐம்பத்திரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் பல இன மக்கள் சகிப்புணர்வுடன் ஒருங்கிணைந்து வாழ வழிகாட்டும் ஒளி விளக்காக இச்சட்டம் அமைந்துள்ளதெனலாம்.

ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய அடிப்படையில், மனச்சாட்சிக்கிணங்க, ஒருங்கிணைந்து வாழ இச்சட்டம் வழி காட்டுகிறது. முஸ்லிம்கள் தங்கள் மார்க்க அடிப்படையிலும் கிறிஸ்துவ, யூத சமயத்தவர்கள் தங்கள் மத நியதிப்படியும் வாழ முழு உரிமையுண்டு. தங்கள் விருப்பம்போல் சமயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவோ சடங்கு முறைகளைச் செய்து பேணி நடக்கவோ முழு உரிமை உண்டு. ஒருவர் மற்றவர் சமயத்தைப் பழிக்கவோ இழிவாகப் பேசவோ அறவே கூடாது. மாற்றார் வழிபாட்டுத் தலங்களையும் புனித இடங்களையும் காப்பதில் அனைவருக்கும் சமயப் பொறுப்பு உண்டு.

இதற்கெல்லாம் முடிமணி வைத்தாற்போல் எந்தச் சமயத்தவரிடையேனும் சச்சரவு ஏதாவது ஏற்பட்டால்,