பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா, பார்த்தசாரதி 21 மறுபடி அவன் வகுப்பில் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான். எ திரே பார்வையைச் செலுத்தி உட்காரத். தொடங்கியிருந்த மாணவர்களை நோக்கிப் பாடத்தைத் தொடங்கியபோது வலதுகோடியில் மாணவிகள் பத்மாவும் சரோஜாவும் தங்களுக்குள் தன் பக்கம் பார்த்து விரலைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த் தான. - சைலன்ஸ்! பத்மா, சரோஜா என்ன பேசlங்க?இரண்டு பெண்களும் சிறிது மிரண்டுபோய் எழுத்து நின்றார்கள். * - - - என்ன பேசினிங்க? நிஜத்தைச் சொல்லனும்.' - சரோஜாதான் சார் பேசினா. நான் இல்லே சார்.' என்ன பேசினா? சொல்லேன்." வந்து சார்...வந்து' - வந்தாவது போயாவது விஷயத்தைச் சொல்லு..." "நீங்க ராஜேஷ் கன்னா மாதிரி இருக்கீங்கன்னு: சரோஜா சொல்றா சார்." . . வகுப்பு முழுதும் மெல்லிய சிரிப்பலை பரவி ஓய்ந்தது. "கிளாஸ்லே பாடத்தைக் கவனிப்பாங்களா யார் எந்த மாதிரி இருக்காங்கன்னு ஒருத்தருக்கொருத்தர் வர்ணிச்சுக் கிட்டிருப்பாங்களா?’’ - - சரோஜா என்ற பெண்ணின் முகம் சிவந்து விட்டது. அவள் சுதர்சனனை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கவே கூசினாள். - " . . . . - . . "சரி உட்காருங்க. கிளாஸ்லே இனிமே சினிமா விஷய மெல்லாம் பேசப்பிடாது. பாடத்தைக் கவனியுங்க... அவர்கள் உட்கார்ந்தனர். பாடத்தைக் கவனித்தனர். ஆனால் பாடம் நடத்த முற்பட்ட சுதர்சனனுக்குத்தான் பாடத்தில் கவனம் அழுந்தவில்லை. வகுப்பிலே அழகான பெண்கள் தன்னுடைய தோற்றத்துக்குக் கொடுத்த அழகிய MMS TTLLSAAAAS0 S M S M S M S MMMS